திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம்!

திருப்பதி மலைப்பாதை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு காட்டு  யானைகள் நடமாட்டம் காணப்பட்டது. திருமலையில் இருந்து திருப்பதி செல்ல பயன்படும் முதலாவது மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு காட்டு யானைகள் நடமாட்டம் காணப்பட்டது.…

திருப்பதி மலைப்பாதை பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு பிறகு காட்டு  யானைகள் நடமாட்டம் காணப்பட்டது.

திருமலையில் இருந்து திருப்பதி செல்ல பயன்படும் முதலாவது மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு காட்டு யானைகள் நடமாட்டம் காணப்பட்டது. இந்நிலையில் யானைகள் நடமாட்டத்தை அப்பகுதி வழியாக சென்ற  பேருந்துகள், மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவற்றில் பயணிக்கின்ற பயணிகள் வீடியோ எடுத்து பதிவு செய்தனர்.

இதற்கிடையே காட்டு யானைகள் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை வன பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மலைப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்கின்ற உள்ளூர் மக்கள், மற்றும் பக்தர்கள்  மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.