ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டும் ஆப்பிள் ஒரு பெரிய ஈவென்டை ஏற்பாடு செய்ய உள்ளது, இந்த ஈவென்டில், ஆப்பிள் ஐபோன் 15 தொடரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
எப்போதும் போல, இந்த முறையும் இந்த நாளில் என்ன அறிமுகப்படுத்தப்படும் என்பதை நிறுவனம் தெரிவிக்கவில்லை, ஆனால் புதிய ஐபோன் தொடர் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்பது தெளிவாகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆப்பிள் தனது வரவிருக்கும் ஐபோன் சீரிஸை செப்டம்பர் 12 அல்லது 13 ஆம் தேதி வெளியிடலாம் என்று சில நாட்களாக வரும் செய்திகளில் தகவல்கள் கிடைத்தன. அதே நேரத்தில், இந்த ஈவென்ட் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை, ஆனால் இப்போது ஐபோன் தயாரிப்பாளர் இந்த ஈவென்ட் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆப்பிளின் இந்த மெகா ஈவென்டில் iPhone 15 தொடர் அறிமுகப்படுத்தப்படலாம். ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஐபோன் 15 தொடரில் வெளியிடப்படலாம். ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸில் நிறுவனம் ஏ17 பயோனிக் செயலியை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.