உறவினர்கள் இல்லாததால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட முதியவர்?

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை பெற்று வந்த முதியவரை வெளியே தூக்கி சென்று போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நாமக்கல் அருகே வேட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்  முதியவர் ராஜமாணிக்கம் (61)  தனியாக…

நாமக்கல் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை பெற்று வந்த முதியவரை வெளியே தூக்கி சென்று போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
நாமக்கல் அருகே வேட்டாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர்  முதியவர் ராஜமாணிக்கம் (61)
 தனியாக வசித்து வரும் இவர்,  தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து
வந்துள்ளார். கடந்த 7 ம் தேதி வீட்டில் இருந்த ராஜமாணிக்கத்திற்கு உடல்நிலை சரியில்லாததால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராஜமாணிக்கத்திற்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலையில் ,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, இன்று அதிகாலை 3 மணி அளவில்
மருத்துவமனைக்கு வெளியே சாலையின் ஒரமாக சிலர் தூக்கிச்சென்று போட்டதாக கூறப்படுகிறது.
சாலையில் கிடந்த ராஜமாணிக்கத்தை கவனிக்க யாரும் இல்லாததால் சுமார் 4 மணி
நேரமாக வலியால் துடித்துள்ளார்.  இதுகுறித்து தகவல் அறிந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு, மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி  நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.