2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- பேரறிஞர் அண்ணா விருது- நாஞ்சில் சம்பத்
- மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார்
- பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்
- சொல்லின் செல்வர் விருது – சூர்யா சேவியர்
- சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
- தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
- அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – இரா. சஞ்சீவிராயர்
- சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழ்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/oA4F87iee8
— CMOTamilNadu (@CMOTamilnadu) January 26, 2022
- தேவநேயப்பாவாணர் விருது – கு.அரசேந்திரன்
- உமறுப்புலவர் விருது – நா.மம்மது
- கி.ஆ.பெ. விருது – ம.இராசேந்திரன்
- கம்பர் விருது – பாரதி பாஸ்கர்
- ஜி.யு.போப் விருது – ஏ.எஸ்.பன்னீர்செல்வம்
- மறைமலையடிகள் விருது – சுகி.சிவம்
- இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்
- அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான.அலாய்சியஸ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்