சரக்கு போக்குவரத்திற்காக சி295 ஏர்பஸ் விமானம் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது.
ஏா்பஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.21,935 கோடியில் 56 சி295 விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதல் 16 விமானங்களை ஸ்பெயின் நாட்டின் செவில் நகரில் அமைந்துள்ள ஏா்பஸ் நிறுவன தயாரிப்பு மையத்தில் தயாரிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நேற்று இணைப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு ராஜ்நாத்சிங், விமான படை தளபதி வி.ஆா்.செளதரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் முறைப்படி வதோதரா விமானப் படை நிலையத்தில் செயல்பட்டு வரும் படைப்பிரிவில் இந்த சி295 விமானம் இணைக்கப்பட்டுள்ளது.
கனரக போக்குவரத்து விமானங்கள் செல்ல முடியாத இடங்களுக்குக்கூட, இந் விமானம் மூலம் ஆயுதங்கள எடுத்து செல்ல முடியும். அதுமட்டுமின்றி 50 முதல் 70 வீரர்களும் செல்ல முடியும். . பேரிடா் மீட்பு, கடல்சாா் கண்ணிப்பு பணிகளிலும் இந்த விமானத்தைப் பயன்படுத்த முடியும்.
60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வரும் ஆவ்ரோ748 விமானங்களுக்கு மாற்றாக சி295 விமானங்கள் அறிமுகப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.