அதிமுக எப்போதும் எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது, திமுக தான் அடிமையாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த அவர், “ நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் நடந்தாலும் கோடநாடு சம்பவத்தை மட்டும் திட்டமிட்டு பேசுகின்றனர். கோடநாடு விவகாரத்தில் சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது பதிலளிக்காதது ஏன்? காவிரி விவகாரத்தில் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரை அதிமுக முடக்கியது. அதிமுக எப்போதும் எந்த கட்சிக்கும் அடிமை கிடையாது, திமுக தான் அடிமையாக இருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
90 சதவீத வழக்கு விசாரணை முடிந்த நிலையில் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியது ஏன்? கோடநாடு சம்பவ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜரானது திமுக வழக்கறிஞர்கள் தான். கோடநாடு வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்தது அதிமுக. அந்த குற்றவாளிக்கு ஆதரவாக இருந்தது திமுக.
பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? திமுக கூட பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே? தமிழகத்தின் பிரச்சனைக்காக மத்திய அரசிடம் அதிமுக எப்போதும் எடுத்துரைக்கும். இவ்வாறு கூறினார்.