மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாராம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை குழந்தைகள் பிரிவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அறை முழுவதும் பரவிய இந்த தீயால் அங்கி சிகிச்சைப் பெற்று வந்த 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. மேலும் 7 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பண்டாரா பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்