பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இன்று 23 வது தாய்மொழி நாள் கொண்டாடப்படும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தாய்மொழி தினம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது,
தமிழ்வழிக் கல்வி தமிழ்நாட்டில் இன்னும் கனவாகவே நீடிப்பது கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழை காக்க நூற்றுக்கணக்கானோர் உயிர்தியாகம் செய்த தமிழ்நாட்டில், தமிழுக்கு இன்னும் உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பது தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செய்தியாகும் என்று கூறிய ராமதாஸ் ,2006-ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயமாக்கி இயற்றப்பட்ட சட்டம், நீதிமன்றங்களின் தலையீட்டால் செயல்பாடின்றி கிடப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதார்.
மேலும் , தாய்மொழி நாளை பெயரளவில் கொண்டாடுவது வலியைத் தருவதாக கூறியுள்ளார்.பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக்கும் சட்டத்தை செம்மையாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ராமதாஸ், பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ப்பாடத்தை கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.