தொடங்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் -முடிவுகள் நாளை அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில்  தொடங்கியது.  நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் …

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில்  தொடங்கியது. 

நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம்  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார்.

இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று  (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.

காலை 9 மணிக்கு தொடகி இதன் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.