கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது, ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத பழக்கமல்ல என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவேறு தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு தீர்ப்பு வழங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
11 கேள்விகள் எழுப்பபட்டன. முதலில் இந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டுமா? சீருடை விவகாரத்தில் கல்வி நிலையங்கள் முடிவை எடுக்க முடியுமா ? ஹிஜாப்பை அணிய அனுமதி அளிக்க முடியுமா? அரசின் உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளதா?
ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியாமையானதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
பின்னர், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி ஹேமந்த் குப்தா தெரிவித்தார்.
“எனக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. ஹிஜாப் மேல்முறையீட்டு மனுக்களை அனுமதிக்கிறேன்” என்று நீதிபதி சுதான்சு துலியா தெரிவித்தார். நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் உச்சநீதிமன்ரத்தின் கூடுதல் அமர்வுக்கு ஹிஜாப் வழக்கு அனுப்பப்பட்டது.
முன்னதாக, விருப்பப்பட்ட ஆடையை அணிவது உரிமை என்றால், ஆடை அணியாமல் இருப்பதும் அதில் வருமா? மிடி, மினி போன்று விருப்பப்பட்ட ஆடைகளில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியுமா? சிலுவை, ருத்ராக்ஷம் போன்றவை சட்டைக்கு உள்ளே அணியப்படுகிறது. மற்ற சமூகத்தினர் சீருடை அணியும் நிலையில், ஒரு சமூகத்தினர் மட்டும் முக்காடு அணிய கோரிக்கை விடுக்கிறது என்று ஹிஜாப் வழக்கில் ஏற்கனவே நீதிபதி ஹேமந்த் குப்தா கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும். இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மொத்தம் 23 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் பெட்டிஷன் மனுக்கள் ஆகும்.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதான்ஷு துஹியா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வாழங்கப்பட்டது.