இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், 7 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் இந்தியா வழங்கிய நிவாரண உதவிகள் இதுவரை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அருகே , இரண்டாம் மணல் தீடையில்
பைபர் படகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த. ஏழு இலங்கைத் தமிழர்கள் தஞ்சம்
அடைந்தனர்.
இந்நிலையில், மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கடற்படை போலீசார்
மற்றும் இந்திய கடலோரக் காவல் படையினர் கூட்டாக அவர்களை மீட்டு
மண்டபம் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்யும்
பொழுது, இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்துக் கோயில்கள்
அழிக்கப்பட்டு, எங்கே பார்த்தாலும் புத்த மதக் கோயில்களை கட்டி மதவாதம்
பெருகிவிட்டது என்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை
காப்பாற்ற , பல நாடுகளில் இருந்தும் குறிப்பாக இந்தியாவில் இருந்தும் வழங்கப்பட்ட
எந்த நிவாரண உதவியும் தமிழர்கள் பகுதியில் முழுமையாக வந்து சேரவில்லை.
இன்றளவும் இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடித்துக் கொண்டே இருப்பதாகவும்,
பொருளாதார மீட்புக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் இலங்கை
அரசாங்கம் இன்று வரை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்குப் பின் அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது.
—-கு.பாலமுருகன்