வெளியானது ஷாருக்கானின் “டங்கி டிராப் – 4” | இணையத்தில் வைரல்!

தி டங்கி திரைப்படத்தின் டிராப் – 4 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.   பதான்,  ஜவான் போன்ற படங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தற்போது…

தி டங்கி திரைப்படத்தின் டிராப் – 4 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  

பதான்,  ஜவான் போன்ற படங்களில் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தற்போது தன்னுடைய அடுத்த ப்ளாக்பஸ்டர் படத்திற்கு தயாராகி விட்டார்.  ஷாருக் கான்,  விக்கி கெளஷல்,  டாப்ஸி உள்ளிட்டவர்கள் நடித்து,  ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாகி உள்ள டங்கித் திரைப்படம் இந்த டிசம்பர்  மாதம் 21ஆம் தெதி வெளியாக இருக்கிறது.

ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.  டங்கி திரைப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இன்று வெளியிடப்பட்ட டங்கி படத்தின் டிராப்-4, ராஜ்குமார் ஹிரானியின் அன்பான உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.

ரயிலில் நடிகர் ஷாருக் கான் (எஸ்ஆர்கே) பயணிப்பதுடன் தொடங்கும் கதையானது, அதைத் தொடர்ந்து படத்தில் நடைபெறும் சாகசத்துக்கான தொனியில் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. பஞ்சாபில் உள்ள ஒரு அழகிய கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகிய இருவரும் லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவைச் சந்திக்கும் ஹார்டியுடன்தொடங்கிறது.

அற்புதமான விசித்திரக் கதாபாத்திரங்களை இந்த டிராப்-4 அறிமுகப்படுத்துகிறது.  வெளிநாடுகளுக்கு ஒரு அசாதாரண பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.