சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில், 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு சிறையில் உள்ளார். இந்நிலையில், வருமானத்தை குறைத்துக் காட்டியதாக வருமான வரித் துறை ஆணையர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் 27-ந் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அவரிடம் விளக்கங்கள் பெற்று பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்