மதுரை நாராயணபுரம் பகுதியில் உரிய பாதுகாப்பு கவசம் இன்றி கழிவுகளை அகற்றும் பணியில் மாநராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சிக்குட்டபட்ட விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாத நிலையில் சிறய அளவில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு கழிவு நீர் வெளியயேற்றப்பட்டு வருகிறது. இந்த கால்வாயில் சில இடங்களில் மனித கழிவுகளும் கலக்கப்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் புகாரையடுத்த துாய்மை பணியாளர்கள் அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் இன்றி கழிவுநீரில் இறங்கி பணி செய்தனர். மேலும் துாய்மை பணிகளில் ஈடுபடக்கூடிய துாய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கழிவுநீரில் பாதுகாப்பு கவசங்கள் இன்றி பணி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.