28.9 C
Chennai
May 21, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரூ.52,000-ஐ எட்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52000-க்கு விற்பனையாகிறது. 

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று  விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430-க்கும்,  சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும்,  சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக ரூ. 52,000ஐ தொட்டுள்ளது.  இந்த விலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது.  வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிரடியாக அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading