முக்கியச் செய்திகள் தமிழகம்

மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கப்பரிசு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில்  வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டி டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற  உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர் மாரியப்பன் உள்பட 3 வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாடு வீர்ர் மாரியப்பனுக்கும் அமெரிக்க வீரர் சாம் க்ரேவிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 1.88 மீ. உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலு-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. அவரின் சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கல்லூரி சேர்க்கை தொடங்கும் முன் 12ம் வகுப்பு மதிப்பெண்கள்: சிபிஎஸ்இ உறுதி

Halley Karthik

பேரூராட்சிகளில் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

EZHILARASAN D

’பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பு வழங்க வேண்டும்’ – இபிஎஸ் வலியுறுத்தல்

G SaravanaKumar