தேர்தல் ஆணையத்திடம் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் அறிக்கையை வழங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புகாராக வழங்கியுள்ள இந்த அறிக்கையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன்தான் நடத்தப்பட வேண்டும். இருவரின் ஒப்புதலின்றி கூட்டம் நடத்தக்கூடாது. அதேபோல இந்த கூட்டத்தில் பொருளாளர் என்கிற முறையில் தான் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே நடந்து முடிந்த கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதில் கட்சியின் பொதுச்செயலாளராக ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்நிலையில் இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து இந்த நடவடிக்கைகளுக்க பதிலடி கொடுக்கும் விதமாக, இபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்துள்ளது. இதில்
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தற்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனுவை தயார் செய்யும் பணியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரம் காட்டி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.