“ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே” – ‘ஆட்டோகிராஃப்’ ரீ -ரிலீஸ் தேதி அறிவிப்பு!

21 ஆண்டுகளுக்கு பிறகு சேரனின் ஆட்டோகிராஃப் படம் மே.16 அன்று ரீ-ரிலீஸ் ஆகிறது.

சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆட்டோகிராஃப்’. சேரன், கோபிகா, சிநேகா, மல்லிகா, கன்னிகா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை சேரனே தயாரித்திருந்தார்.

படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் இன்றளவும் பலருக்கும் ஃபேவரட் ஆன திரைப்படமாக உள்ளது.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. அந்த வகையில் படம் வரும் மே 16-ம் தேதி திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.