மத்திய அரசு இரட்டை தலைமையிலான ஆட்சியை கொண்டு வர முயற்சிப்பதால் ஆளுநரால் நான் பட்ட வேதனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அனுபவிப்பதாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர்
நாராயணசாமி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து மாநிலங்களிலும் இரட்டை தலைமை ஆட்சியைக் கொண்டு வர முயற்சிக்கின்றது. ஆளுநர்கள் மூலமாக ஆட்சி நடத்துவதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நசுக்குவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகின்றது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மு.க.ஸ்டாலின் கூறியதை நான் மனமாற வரவேற்கின்றேன். ஏனெனில் நான் அதில் முழுமையாக பாதித்துள்ளேன். ஆளுநர் கிரண்பேடி மூலமாக மத்திய அரசு எனக்கு தொல்லைகள் பல கொடுத்து மாநில அரசின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியது. நான் அனுபவித்த வேதனையை தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுபவித்து வருகின்றார். இது வெகுகாலம் நீடிக்காது, முற்றுப்புள்ளி வைக்கும் காலம் விரைவில் வரும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வீரசாவர்கார் தியாகி எனக் கூறி புதுச்சேரியில் அமைத்து வரும் தியாகப் பெருஞ்சுவற்றில் அவரது பெயரைப் பதித்து விட்டு இதை எதிர்த்து ப்போராடுவர்களை எதிர்கொள்வேன் என ஆளுநர் தமிழிசை கூறுகின்றார். வரலாறு தெரியாத
தமிழிசை, இவர் தப்பி தவறி பாரதிய ஜனதா கட்சி தலைமையை ஏற்று இப்போது ஆளுநராக வந்துள்ளார். வீரசாவர்காரை தியாகியாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். வரலாற்றைத் தெரிந்து கொண்டு ஆளுநர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை பேசட்டும்.
புதுச்சேரியில் தினம் தினம் குண்டு வெடிப்பு, பட்டப்பகலில் நடக்கும் கொலைகள்
காரணமாக புதுச்சேரியின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால்
சுற்றுலாவினர் வரத்து குறைந்து பொருளாதாரம் நசுங்கிவிடும் அளவிற்கு
அலங்கோலமன ஆட்சி முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகின்றது இது நீடிக்காது என நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-ம.பவித்ரா