10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தொடங்கியது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்துள்ளதன் காரணமாக 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பேட்ச் வாரியாக தேர்வில் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகளை மே 2-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும், மதிப்பெண்களை மே 4-ஆம் தேதிக்குள் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,11,12-ஆம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வு நேரம் 3-ல் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்