29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

“நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியத்திற்கு அடிகோலியவர் பூ ராமு” – தமுஎகச அஞ்சலி

வீதிநாடக, திரைக்கலைஞர் கருப்பு ராமு மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், வீதி நாடக மற்றும் திரைக்கலைஞருமான தோழர் வ.இராமு அவர்கள் 27.06.2022 அன்று மாலை உடல்நலக்குறைவால் காலமானார். அன்னாரது மறைவிற்கு தமுஎகச மாநிலக்குழு நெஞ்சார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாணவப்பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் வழியே பொதுவாழ்க்கைக்கு வந்த ராமு, இறுதிவரை  இடதுசாரியாக வாழ்வை மேற்கொண்டவர்.  சாதி மறுப்பும் சடங்கு மறுப்பும் சொந்தவாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவை என்பதை உணர்த்தும்விதமாக தன் பெற்றோரின் இசைவுடன் காதல் மணம் புரிந்தவர்.

தென்சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை கட்டியமைக்கவும், அப்பகுதியின் கொண்டாட்டத்திற்குரிய நிகழ்வுகளில் ஒன்றாக சைதை கலை இரவினை வடிவமைக்கவும் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். “கனவுகள் 2000” என்ற தலைப்பில் புத்தாயிரமாவது ஆண்டில் நடத்தப்பட்ட நிகழ்வினை வெற்றிகரமாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். நாட்டுப்புறக் கலைஞர்களின் நலவாரியம் அமைவதற்கு அடிகோலிய நாட்டுப்புறக் கலைஞர்கள் கோரிக்கைச் சங்கமத்தை முன்னின்று நடத்தியவர்.

1990ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை சென்னை கலைக்குழுவில் இணைந்திருந்த ராமு அக்குழுவினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் பலவற்றிலும் கவனம்பெறத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்தார். குறிப்பாக, பயணம் நாடகத்தில் அவர் ஏற்று நடித்த “நகரதேவன்” பாத்திரம் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியாய் இருந்தது.

இயக்குநர் சசியின் ‘பூ’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி ‘பூ ராமு’வாகியவர்  பரியேறும் பெருமாள், கர்ணன், நெடுநல்வாடை உள்ளிட்ட படங்களில் தனது இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி தனி இடம் பிடித்தவர்.

ஆட்டோ ராமு, பூ ராமு, கருப்பு ராமு என நமக்குள் நிறைந்திருக்கும் தோழர் ராமு மறைந்தாலும் அவர் தனது பணிகளுக்காகவும் கலைப்பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், உற்றார் உறவினர் யாவரது துயரிலும் தமுஎகச மாநிலக்குழு பங்கெடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading