இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி அம்மா, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி(88) உடல்நலக் குறைவால், மைசூருவில் உயிரிழந்தார். இதையடுத்து, திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
1957-ல் விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம், திரையுலகில் நுழைந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உட்பட 17-க்கும் மேற்பட்ட மொழிகளில், 40,000திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள எஸ். ஜானகி, தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து 33-க்கும் மேற்பட்ட மாநில விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2013-ல் இந்தியாவின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்‘ விருது இவருக்கு அறிவிக்கப்பட்டபோது, தனக்கு அது தாமதமாக கிடைப்பதாகக் கூறி, அதை ஏற்க மறுத்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டுடன் தான் பாடுவதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்த அவர், அதன் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து முழு ஓய்வில் இருந்து வந்தார். இதனிடையே மறைந்த பாடகி எஸ்.ஜானகியின் உடலுக்குத் திரை உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.




