28 C
Chennai
December 7, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச் அலர்ட் | 22, 23ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டுக்கு  ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

அதன்படி சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், சேத்துப்பட்டு, கிண்டி, ராயப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது

இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 22, 23ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதனை ஒட்டி  ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy