பெண்களை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்துலூர் அருகே பணிக்கு சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏலமன்னா பகுதியில், தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை வேலைக்கு சென்ற மூவரை தாக்கியது. படுகாயம் அடைந்தவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வெளியே நடமாட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.




