நியூஸ் 7 தமிழ் சார்பில் சேலம் மற்றும் சென்னையில் இன்றும் நாளையும் பிரமாண்ட கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவையில் இரண்டு ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ், கல்வி கண்காட்சியை நடத்தியது. இந்தாண்டு கொடிசியா அரங்கில் விமரிசையாக நடைபெற்ற கண்காட்சியில், 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்தன. மேலும், இந்தக் கண்காட்சி வாயிலாக உடனடி மாணவர் சேர்க்கைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைத்தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் இந்தாண்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்வி கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கலில் பரிசு வழங்கப்பட்டது. இரண்டு நாள் நடைபெற்ற கண்காட்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
கோவை, மதுரையில் நடைபெற்ற கல்விக் கண்காட்சிகளுக்கு பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மாபெரும் வரவேற்பு அளித்தன. அந்த வரவேற்பை தொடர்ந்து சேலம் மற்றும் சென்னையில் ((நாளை மற்றும் நாளை மறுநாள் )) இன்றும், நாளையும் கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
சேலம் மூவேந்தர் அரங்கத்தில் நடைபெறும் கண்காட்சியிலும், 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.