“என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்” – இசையமைப்பாளர் #YuvanShankarRaja!

“என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.  சினிமாத் துறையில் தனக்கென தனி ரசிகர்…

“My ears are closed to negativity” - Yuvan Shankar Raja!

“என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும்” என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.  சினிமாத் துறையில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும், தனிப் பாதையையும் உருவாக்கியவர். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி உள்ள தி கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது;

“ஆரம்பத்தில் நான் இசைமயைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன்.

எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்கத் துவங்கினேன். இப்படி தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும். நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.

எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக் கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும்.

இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்த துறையில் நீடித்து நிற்க முடிகிறது. எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.