தெருநாய்களைக் கண்காணிக்க கியூஆர் கோடு தயாரித்துள்ள மும்பையைச் சேர்ந்த பொறியாளரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆகாஷ் ரிட்லான். பொறியாளரான இவர் நாய்களின் மீது அலாதி பிரியம் கொண்டவர். இந்நிலையில், ஆகாஷ் தெருநாய்களைக் கண்காணிப்பதற்காக கியூஆர் கோடுகளை தயாரித்துள்ளார். இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்தால் நாயின் பெயர், அதன் மருத்துவத் தகவல், அதனைப் பாதுகாக்கும் உரிமையாளரின் தகவல் உள்ளிட்டவை கிடைக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து, ஆகாஷ் கூறுகையில், ” நாய்களின் இருப்பிடத்தைக் கண்டறியவும், அவற்றுக்கு கருத்தடை அல்லது தடுப்பூசி போடுவது குறித்த உத்திகளை உருவாக்கவும் அரசாங்கத்திற்கு இந்த கியூஆர் கோடு உதவும். இந்த QRஐ இப்போது குறைந்த விலையில் வழங்க விரும்புகிறோம். விலங்குகளுக்கு உணவளிக்கும் அல்லது மீட்புப் பணிகளில் ஈடுபடும் அமைப்புகளும் இதைப் பயன்படுத்தலாம், ” எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா