திருமணத்தின் போது ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் மக்களவையில் தனி உறுப்பினர் மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது.
புதுமணத் தம்பதிகளுக்கான பரிசுப் பொருட்களுக்கு செலவிடும் தொகைக்கு வரம்பு நிர்ணயிப்பது தவிர, திருமணங்களில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை, பரிமாறப்படும் உணவின் அளவு ஆகியவற்றில் வரம்பு நிர்ணயம் செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் கதூர் சாஹிப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., ஜஸ்பிர் சிங் கில் அறிமுகப்படுத்திய தனி நபர் மசோதா, வெள்ளிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த மசோதாவின் பெயர் ‘சிறப்பு சந்தர்ப்பங்களுக்கான வீண் செலவுகளைத் தடுக்கும் மசோதா 2020’. இந்த மசோதாவை 2020 ஜனவரியில் காங்கிரஸ் எம்.பி. இது தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி 50 பேர் மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்க முடியும். மேலும், திருமணத்தில் 10 உணவுகளுக்கு மேல் பரிமாற முடியாது. இது தவிர சீர்வரிசியாக அல்லது பரிசாக ரூ.2500க்கு மேல் வழங்க முடியாது.
ஏன் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது:
திருமணம் போன்ற விசேஷ சமயங்களில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் பல விதிகள் உள்ளன. குறிப்பாக, திருமணத்தில் பரிசுகளை வாங்குவதற்குப் பதிலாக, அதன் தொகையை ஏழைகள், ஆதரவற்றோர், அனாதைகள் அல்லது சமூகத்தில் பிதங்கிய பிரிவினருக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.
இந்த மசோதா ஆடம்பரமான திருமணங்களின் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்பிர் சிங் கில், இந்த மசோதாவின் பின்னணியில் உள்ள நியாயத்தை விளக்கினார்.
Introduced Private Members Bill "Prevention of Wasteful Expenditure on Special Occasions Bill". HIGHLIGHTS
Not more that 50 people in BaratNot more than 10 dishes to be served
Not more than Rs 2500 in Shagan or Gifts
Will help in improving sex ratio
No more foeticide@IYC pic.twitter.com/jyq4wY3rSN
— Jasbir Singh Gill MP official account (@JasbirGillKSMP) August 4, 2023
இது குறித்து போசிய அவர், “திருமணம் போன்ற விசேஷங்கள், மணமகளின் குடும்பத்தின் மீது பெரும் நிதிச்சுமையை சுமத்துகிறது. மக்கள் தங்கள் மனைகள், சொத்துக்களை விற்று, வங்கிக் கடன் பெற்று திருமணங்களை பிரமாண்டமாக நடத்துவது போன்ற பல சம்பவங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,” என்றார்.