இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “டிசம்பர் மாத இறுதிக்குள் கொள்முதல் செய்யப்படும் 267 கோடி டோஸ்கள் மூலம் இந்தியாவில் குறைந்தபட்சம் 18வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்’ என்று உறுதி கூறினார்.
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை நாளொன்றுக்கு 25 லட்சம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்த ஹர்சவர்தன், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதிலும் புதிய சாதனையை எட்டியுள்ளதாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்







