மெக்சிகோ : 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மெக்சிகோவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகன் மாநிலமான குரேரோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவுகோலில்ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே புத்தாண்டை முன்னிட்டு மெக்சிகோ அதிபர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போது பூகம்ப எச்சரிக்கை மணி ஒலித்ததால் செய்தியாளர் சந்திப்பு தடைபட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.