”இமானுவேல் சேகரனார் போராடிய வழியில் சமூகநீதியை காப்போம்” என நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரனார் 1924-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று பிறந்தார். இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் வட்டம், செல்லூர் கிராமம் ஆகும். இவர் 1942-இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் சென்றார். மேலும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகவும் போராடினார்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அவரது சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
“ இமானுவேல் சேகரனார் குடும்பத்தின் சார்பில் முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர் அதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு ரூபாய் மூன்று கோடி மதிப்பில் பரமக்குடி நகராட்சி பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்துக் கொடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளது. மேலும் இமானுவேல் சேகரனார். எதற்காக போராடினாரோ அதே வழியில் சமூகநீதி காக்கப்படும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.