ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பதால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மக்களிடையே பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக கூறிய கே.எஸ்.அழகிரி, அதனை மக்களிடையே எடுத்துரைக்கும்விதமாகவே இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்லியில் ராகுல்காந்தியுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்த கே.எஸ்.அழகிரி, கமல்ஹாசன் தேசிய உணர்வுமிக்கவர் என்றும் அவர் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்பதை தாங்கள் வரவேற்பதாகவும் கூறினார். ராகுல்காந்தி, கமல்ஹாசன் சந்திப்பால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த சந்திப்பால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் எல்லாம் ஏற்படாது எனக் கூறினார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சுதந்திரமாக பேச அனுமதித்துள்ளோம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுவதிலிருந்தே அவர் சர்வாதிகாரமாக செயல்படுவது தெரியவருவதாகக் கூறிய கே.எஸ்.அழகிரி, அனுமதி பெற்றுதான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே சுதந்திரமாக பேச வேண்டிய சூழல் புதுச்சேரியில் நிலவுவதாகவும் விமர்சித்தார்.