கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில், ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாக இருந்த கொடநாடு பங்களாவில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி ஆஃப் செய்யப்பட்டுள்ளது. காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் வீட்டில் நடந்ததை டிஜிபி பார்க்கவில்லை, இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.
90 நாளில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றீர்கள். 2.5 வருடம் ஆகிவிட்டது, முன்னாள் ஆண்டவர்கள் எதனையும் செய்யவில்லை. முதலமைச்சர் சொல்லாததை செய்பவர்கள் என்றார்கள், சொன்னதை ஏன் செய்யவில்லை? உள்ளிட்ட கேள்விகளை சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கேட்டார்.
பின்னர் இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டோம். கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்ட இடத்திலிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.