25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தி படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சூர்யாவுடன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்காமலிருந்து வந்த இவர் 8 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் ஜிம்மில் தான் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை அதில் பதிவிட்டு இருந்தார். ஜோதிகா பாலிவுட் படத்திற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருதாக கூறப்பட்டது.
இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி, நடிகை ஜோதிகா இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் மாதவன், ஜோதிகா மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது மற்றும் மும்பை, முசோரி மற்றும் லண்டனில் படமாக்கப்பட்டது. இப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் பேனரில் அஜய் தேவ்கன், குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தி படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.