முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் பயணம் தோல்வி: இஸ்ரோ

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் கிரையொஜெனிக் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக EOS-3 செயற்கைக்கோள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ‘ஈஓஎஸ்-03’ (EOS-3) என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது. 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலை தொடங்கியது. இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், ராக்கெட் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் பயணம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. க்ரையோஜெனிக் எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் பயணம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாவீரன் மங்கள் பாண்டேவின் பிறந்த நாள் இன்று

Vandhana

ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று எனக்கு தெரியாது – ஓ.பன்னீர்செல்வம்

G SaravanaKumar

சென்னையில் டீசல் தட்டுப்பாடா?

Web Editor