31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடங்கியது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த
4-ந் தேதி இறந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி
27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு
கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த
தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த இயந்திரங்கள் தற்போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பெங்களூரில் இருந்து வந்துள்ள பெல் நிறுவன பொறியாளர்கள் 8 பேர் முதல் கட்ட பரிசோதனையில் ஈடுபட்டனார்.

இந்த தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன இவற்றில்
பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது பரிசோதனை
செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்
நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்களை சரிபார்க்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. தேவைப்பட்டால் இவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அறிவுரைப்படி நடந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக கண்காணிப்பு குழு நிலை குழு பறக்கும் படை அமைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைமுறையில் இருக்கும். தேர்தல் ஆணையம் இது குறித்து மேலும் ஆலோசனை வழங்கினால் அது அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவோம் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading