முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் திரைப்பட விருது வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி அவரது பெயரில் திரைப்பட விருது இல்லை என மத்திய அரசு முடிவு எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் திரைப்படைத் துறையை ஊக்குவிக்கும் வகையில் 1954 முதல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1965 முதல் தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படத்திற்கு நர்கிஸ் தத் விருதும், 1984 முதல் சிறந்த அறிமுக இயக்குநருக்கு இந்திராகாந்தி விருதும் வழங்கப்பட்டு வருகின்றன.








