இந்தியாவில் 2021-2022ம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.4% ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021 ஆண்டுகளின் இரண்டாம் காலாண்டில் ரூ.32.97 லட்சம் கோடியாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2021-2022ம் ஆண்டுகளின் இரண்டாவது காலாண்டில் ரூ.35.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8.4% சதவிகித வளர்ச்சியாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டுகளில் 3% ஆக இருந்த வேளாண் துறை உற்பத்தியானது 2021-22 ஆண்டுகளில் 4% ஆக அதிகரித்துள்ளது என்றும், 1.5% ஆக இருந்த உற்பத்தி துறை 5.5% ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Real GDP has exceeded the pre-covid (Q2FY20) level in Q2FY22, registering a robust growth of 8.4% as against the contraction of 7.4% witnessed in the Q2FY21.@Rao_InderjitS @PIB_India @NITIAayog @PMOIndia
— Ministry of Statistics & Programme Implementation (@GoIStats) November 30, 2021
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலும், அதிகரித்த வணிக நடவடிக்கைகளாலும் எதிர்பார்த்ததைவிட ஜிடிபி வளர்ச்சி கடந்த காலாண்டில் உயர்ந்துள்ளது.
அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் பங்களிப்புகள் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்துள்ளதாக பொருளாதார அறிஞர் கவுரா சென் குப்தா தெரிவித்துள்ளார்.
Let us extend a cautious welcome. It is NOT yet a ‘V’ shaped recovery. The fine print will bear that out
There are sectors of the economy that are still crippled and need help and time to recover
— P. Chidambaram (@PChidambaram_IN) November 30, 2021
அரசின் இந்த அறிக்கை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், இது ‘V’ வடிவ வளர்ச்சி அல்ல. பொருளாதாரம் இன்னும் தடுமாறிக்கொண்டிருகிறது இருக்கிறது. அதை மீட்டெடுக்க இன்னும் முயற்சிகள் தேவைப்படுகின்றன.” எனக் கூறியுள்ளார்.