27 C
Chennai
December 8, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு

ஜூலை மாதம் நடைபெறும் நீட் தேர்வு எழுதுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வரும் ஜூலை மாதம் 17ம் தேதி இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மே 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த மே 7ம் தேதி கடைசி நாள் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான கட்டணத்தை உயர்த்தி தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கட்டணம் 1,500 ரூபாயில் இருந்து 1,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு மற்றும் OBC பிரிவினருக்கு 1,400 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், மூன்றாம் பாலினத்தவருக்கான நீட் தேர்வு கட்டணம் 800 ரூபாயில் இருந்து 900 ரூபாயாகவும், வெளிநாடு வாழ் இந்தியர்களில் அனைத்து பிரிவினருக்கும் 8 ஆயிரத்து 500 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர இணைய வழி கட்டணத்துக்கான செலவு, GST வரியையும் தேர்வர்கள் தனியே செலுத்திட வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy