அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு- உயர்கல்வித்துறை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரித்து உயர்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறபட்டது. கிராமங்கள், நகராட்சிகள் மற்றும்…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரித்து உயர்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறபட்டது. கிராமங்கள், நகராட்சிகள் மற்றும் பிற்படுத்தபட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளில் சேர அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க சிரமபடுகின்றனர்.

இதனிடையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்க சேர்க்கையை அதிகரித்து உயர்க்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் எனவும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% வரை கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் எனவும், தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அது சார்ந்த பல்கலைகழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் சேர்க்கைக்கு, கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது, பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெற்று சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து உயர்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.