அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் வெளியான படம் தான் திருவின் குரல். இப்படத்தில் பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். வாருங்கள் மக்களே படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.
வாய் பேச முடியாத, காது சரியாக கேட்காத மனிதர் தான் அருள்நிதி. இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்தவர். அவரது அத்தை மகளாக ஆத்மிகாவும் அப்பாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர். ஒரு நாள் அருள்நிதி மற்றும் அவரது தந்தை பாரதிராஜாவும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது விபத்து ஏற்படுகிறது. இதில் பாரதிராஜாவுக்குத் தலையில் அடிப்படுகிறது. இதனால் அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் லிஃப்ட் மேன், செக்கியூருட்டி உட்பட 4 பேர் கொண்ட கும்பல் பணத்துக்காக மேல் அதிகாரிகளைத் தாக்குகின்றன. இதேபோக லிஃப்டில் வரும் பெண்களைத் தவறாக பார்ப்பது என பல வேலைகளைப் பார்க்கின்றன. அப்போது அருள்நிதியின் அத்தை மகள் ஆத்மிகா மற்றும் அக்காவை தவறாக பார்க்கின்றனர்.
இதனால் கோபம் ஏற்பட்டு அருள்நிதி அவர்களை தொவச்சு எடுக்கிறார். இதன் தாக்கம் உடல் நலத்தில் தேரிவரும் பாரதிராஜா மேல் பாய்கிறது. இதிலிருந்து குடும்பத்தையும் அப்பாவையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் மீதி கதை. படத்தின் முதல் பாதி வரை பாரதிராஜாவுக்கு என்ன ஆக போகிறதோ என்ற கேள்வி இருந்தாலும் 2ம் பாதியில் ஆங்காங்கே போர் அடித்து விட்டது. படத்தின் இசை ஒரு சில இடங்களில் நன்றாக இருந்தது.
பாரதிராஜாவின் நடிப்பு ரொம்பவே தத்ரூபமாக இருந்தது. வாய் பேச முடியாமல் நடித்த அருள்நிதி செய்கை மொழியில் அசத்தியுள்ளார். ஆத்மிகா வழக்கம் போல் பாதி படத்தில் காணவில்லை. நல்ல கதைகள் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி இந்த படத்தைத் தேர்வு செய்ய என்ன காரணமாக இருக்கும் என்ற கேள்வி தான் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு.
ஆக மொத்தத்துல படம் கொஞ்சம் நான் மகான் அல்ல, அயோத்தி உள்ளிட்ட படங்களின் மசாலாவை படத்தில் கலந்துள்ளனர்.