’அன்பு காட்டினால் அடிமையாகி விடுவேன்’ -சிம்பு

’அன்பு காட்டினால் அடிமையாகி விடுவேன் என ‘பத்து தல’  செய்தியாளர் சந்திப்பில் சிம்பு கூறினார்.  பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன்,…

’அன்பு காட்டினால் அடிமையாகி விடுவேன் என ‘பத்து தல’  செய்தியாளர் சந்திப்பில் சிம்பு கூறினார். 

பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் பத்து தல ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுத்து வருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

அப்போது நடிகர் சிலம்பரசன் மேடையில் பேசுகையில், ‘கவுதம் மேனன் VTK2 பணியாற்ற முடியுமா என்று தெரியவில்லை. அவர் நிறையப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். அவருடன் சேர்ந்து இந்த படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

இந்த படத்தைப் பொறுத்த வரை அனைவரின் கதாபாத்திரத்தையும் கிருஷ்ணா அழகாகப் பண்ணி இருக்கிறார். விக்ரம் படத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதன்பின் இந்த படத்தில் அவ்வாறு நடந்துள்ளது. இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. சாயிஷாவின் இந்த படத்துக்காகப் பாடல் நடனமாடி உள்ளார், அவருக்கு நன்றி.

கவுதம் கார்த்திக் ஆக்சனில் அசால்டாக நடித்துள்ளார். அவரது நடிப்பை ரசித்தேன். இந்த படத்தில் ஆக்சன் பயங்கரமாகப் பண்ணி இருக்கிறார். தயாரிப்பாளருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் பத்தாது‌. பத்து தல படம் பற்றி பேசுகிறார்கள் என்றால் ஞானவேல்ராஜா தான்‌. அவருக்கு நன்றி

அன்பு காட்டி விட்டால் நான் அடிமையாகி விடுவேன். இன்று மைன்ட் ப்ரீயாக இருக்கிறது. ரகுமான் சார் பற்றிக் கூற வேண்டும். ஹேட்ஸ்ஆப் சார். டிரெய்லரில் ஒரு பாடல் வருகிறது. அந்த பாடலுக்காக நானே காத்திருக்கிறேன். நாளை வெளியாகிறது. அமீன் இந்த படத்தில் பாடல் பாடி இருக்கிறார். ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி என நடிகர் சிலம்பரசன் மேடையில் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.