சென்னையில் 15 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தீவிர தூய்மைப் பணியாக மாஸ் கிளீன்ங் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதுப்பேட்டை கூவம் ஆற்றில் துவக்கி வைத்தார். இது நீர் நிலைகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் உள்ள பகுதிகள் மண்டல வாரியாக கண்டறியப்பட்டு 12 இடங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆணையர் கையில் கையுறை மாட்டி களத்தில் இறங்கி குப்பைகளை நேரடியாக அகற்றினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் டைடல் பார்க், ஓம்ஆர், இசிஆர் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் வாழும் இடங்களும் உள்ளன. அங்கு மாஸ் கிளீனிங் திட்டத்தை மேற்கொள்ள அனைத்து பணியாளர்களும் இன்று நேரடியாக களத்தில் இறங்கினோம். புதுப்பேட்டை கூவம் ஆற்றை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் கட்டிட கழிவுகள், பழைய கார்கள், தெர்மாகோல்கள் உள்ளிட்ட 150 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் புதிய கழிப்பிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேற்று மட்டும் கூவம் ஆற்றின் ஒரு பகுதியில் 51 லோடு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று 50 லோடு இலக்கு வைத்துள்ளோம். மாஸ் கிளீனிங் என்பது மக்கள் இயக்கமாக நடத்தத் தான். லோக்கல் விளம்பரம் அல்ல. இப்பகுதியில் 51 மெட்ரிக் டன் குப்பைகள் உள்ளன. இவற்றை கூவத்தில் வெள்ள பேருக்கு ஏற்பட்டால் அது கண்டிப்பாக பிரச்னை வரும். பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் எந்த ஒரு இடத்திலும் 15 நாட்களுக்கு மேல் கார் உள்ளிட்ட வாகனம் நிறுத்தி வைத்தால் காவல் துறை மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புதுப்பேட்டை கூவம் ஆற்றின் கரையில் குப்பை கொட்டுவதை தடுக்க காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த பகுதியில் வைக்கப்படும் சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் இரவில் உடைத்து விடுகிறார்கள். அந்த செயலை செய்யும் நபர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா