21 வயதிற்குகீழ் உள்ளவர்கள் மது வாங்க வந்தால் அன்பாக அழைத்து அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பொல்லான் 218-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் அவரது திருவுருவ
படத்திற்கு அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“பொல்லானுக்கு விரைவில் நினைவு மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கியவர்கள் பணியிடைநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். மதுக்கடையின் வேலை நேரத்தை மாற்றும் எண்ணம் இல்லை. காலையில் மது விற்பனை செய்வது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்துள்ளோம். 21 வயதிற்குகீழ் உள்ளவர்கள் மதுவாங்க வந்தால் அன்பாக அழைத்து அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். டெட்ரா பாக்கெட் ஆய்வில் தான் உள்ளது.
மதுவால் பாதிக்கப்பட்டோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் 15 இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொன்முடி என்ன தவறு செய்தார், அவர்மீதான குற்றச்சாட்டு என்ன?அமலாக்கத்துறை சோதனை பாஜகவின்பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.