நான் இயக்குநராக ஒரு படம் எடுத்தால், அதில் நடிகர் விஜய் ஹீரோவாகவும், நடிகை சன்னி லியோன் ஹீரோயினாகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என நகைச்சுவை நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகைகள் சன்னி லியோன், தர்ஷா குப்தா, நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ள நகைச்சுவை கலந்த திகில் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் தங்கர் பச்சான், நடிகர் ஆர்.கே.சுரேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய தங்கர் பச்சான், “தயாரிப்பாளர்களை வாழ வைக்க எதுவுமே இல்லை. தயாரிப்பாளர்கள் நலனில் அக்கறை இல்லை. நாம் பார்க்கும் படம், பாடல் எல்லாமே
தயாரிப்பாளர்கள் சொத்தில் உருவாக்குவது தான். நான் ஒரு சினிமாவை எடுக்க நினைக்கிறேன். ஆனால் 35 ஆண்டுகளாக அதை எடுக்க முடியவே இல்லை. பெரிய நடிகர்களின் படங்கள் தான் தற்போது வெளியாகிறது. திருவிழா பண்டிகை காலங்களில் தான் மக்களிடம் பணம் இருக்கும் அப்போது தான் படங்களை பார்ப்பார்கள். பெரிய நடிகர்களின் படங்களை எப்போது வேண்டுமானலும் பார்க்கலாம்.
திரைப்படத்தை விமர்சனம் செய்வது தற்போது தொழிலாளி விட்டது. ஒரு படத்தை அதிகமாக யார் திட்டுகிறார்களோ அதை தான் மக்கள் பார்க்கிறார்கள். சோஷியல் மீடியாவில் ஒருவரே பல கணக்குகளை வைத்து கொண்டு நிறைய தேவையில்லாத கருத்துகளை பதிவு செய்கின்றனர். இதனால் நிறைய பிரச்சனைகள் வருகிறது. நிறைய படங்கள் வந்து ஓடவில்லை. காந்தாரா திரைப்படம் பெரிய வெற்றி ஆனால் நான் பார்க்கவில்லை. அந்த படம் மண் சார்ந்து மக்கள் சார்ந்து உள்ளது. குல வழிபாடு பற்றி பேசுகிறது. அதனால் தான் பெரிய வெற்றி பெற்றுள்ளது” என்று பேசினார்.
பின்னர் பேசிய ஜி.பி.முத்து, “இந்த படத்தில் நடிக்க என்னிடம் கேட்ட போது சன்னி லியோன் யார் என்று எனக்கு தெரியாது. அவர்களின் சில படங்களை காட்டினார்கள். முதன்முதலில் எனக்கு பட வாய்ப்பு கொடுத்தது இயக்குனர் யுவன் தான். அவர்களை மறக்கவே முடியாது” என்றார்.
ஜி.பி.முத்துவை தொடர்ந்து பேசிய நடிகர் சதிஷ், “நான் இயக்குநராக படம் எடுத்தால், அதில் விஜய் சார் ஹீரோவாக நடித்தால் நல்லா இருக்கும். ஹீரோயினாக சன்னி லியோன் நடித்தால் நல்லா இருக்கும். நடிகர் கிரேசி மோகன் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு எனக்கு கால் செய்திருந்தார். ஆனால் அப்போது என்னால் எடுக்க முடியவில்லை. என்ன சொல்ல வந்தார் என தெரியவில்லை. யாராவது உங்களுக்கு கால் செய்தால் கண்டிப்பாக பேசி விடுங்கள் குறிப்பாக வயதானவர்கள் கால் செய்தால் பேசி விடுங்கள்” என்றார்.
இறுதியாக பேசிய நடிகை சன்னி லியோன், “உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்தது. ஸ்டைலிஷ் தலைவியாக என்னை உருவாக்கியதற்கு அனைவருக்கும் நன்றி. எனக்கு பிரியாணி பிடிக்கும். ஆனால் நான் சைவம் தான். குழந்தைகள் எல்லாம் நமது எதிர்காலம். அவர்களின் அன்பை நினைத்து எனது கண்கலங்குகிறது. தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வேன்” என்று பேசினார்.