நகர்ப் பகுதிகளின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ள அனுமதி வேண்டி, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அணைக்கட்டு தொகுதி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், விரிஞ்சிபுரத்தில் பழுதடைந்த பாலாறு தரைப் பாலத்துக்கு மாற்றாக புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை 2022-23 ஆம் ஆண்டில் மேற்கொள்ள கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் விரைந்து பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டாவில் 7 கி.மீ. தூரத்துக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணிகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், நில எடுப்புப் பணிகளுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி – தஞ்சாவூர் சாலை மோசமான சூழலில் இருப்பதால், அதை சீரமைக்கும் பணிகள், 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வட மாநிலத்தைச் சேர்ந்த படேல் Infrastructure நிறுவனம் தான் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி NHAI-க்கு கடிதம் எழுதப்பட்டள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி நகர்ப் பகுதிகளின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மாநில அரசே மேற்கொள்ள வேண்டி, ஒன்றிய அரசிடம் கடிதம் தரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று மாநில அரசே நகர்ப் பகுதிகளில் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் என்றார்.