கேரள மாநிலம் திருச்சூர் கடல் பகுதியில் குவியல் குவியலாக கரை ஒதுங்கிய சாளை மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.
காலநிலை மாற்றம் ஏற்படும் போது மீன்கள் கரை ஒதுங்குவது தொடர் நிகழ்வாக அரங்கேறி வருகிறது. அதேபோல் அரபி கடலில் சாளை மீன்கள் ஆயிரக்கணக்கில் கரை ஒதுங்கும் நிகழ்வும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறாக கடல் அலை மூலம் கரையில் ஒதுங்கி துடித்துக் கொண்டிருக்கும் மீன்களை உயிரோடு அள்ளிச் செல்வதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் அரபி கடலில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றத்தால் கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆறாட்டு புழா கடற்கரை பகுதிகளில் குவியல் குவியலாக சாளை மீன்கள் கரை ஒதுங்கின. இதை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டு குட்டைகளிலும் பாத்திரங்களிலும் அவற்றை அள்ளிச் சென்றனர். மீன்கள் கரை ஒதுங்கிய சுமார் அரை மணி நேரத்திற்குள் ஏராளமானோர் மீன்களை அள்ளிச் சென்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்