செப்டம்பர் மாதத்தில், இந்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஆண்டு அடிப்படையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.6 லட்சம் கோடியைத் தாண்டியது இது நான்காவது முறையாகும். கடந்த மாதம், அரசின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,62,712 கோடியாக இருந்தது. 2023 செப்டம்பரில் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயான ரூ.1.47 லட்சம் கோடியை விட 10 சதவீதம் அதிகம் என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி ரூ.29,818 கோடி. தவிர, மாநில ஜிஎஸ்டி ரூ.37,657 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.83,623 கோடியாகவும் உள்ளது (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.41,145 கோடி உட்பட). கூடுதலாக, அரசாங்கம் செஸ் மூலம் ரூ.11,613 கோடியை (பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலித்த ரூ.881 கோடி உட்பட) வசூலித்துள்ளது.







