ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒடிசா சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது எம்எல்ஏ சுதிர்குமார் சனல் என்பவர் எழுப்பிய கேள்விக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த இரும்பு மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக், “இந்திய சுரங்கங்கள் மற்றும் புவியியல் மைய இயக்குநரகம் நடத்திய ஆய்வில் ஒடிசாவின் தியோகார், கியோஞ்ஜஹார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மூன்று தங்கச் சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, கியோஞ்ஜஹார் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், தியோகார் மாவட்டத்தின் ஒரு இடத்திலும் பூமிக்கடியில் தங்கம் புதைந்துகிடப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஒடிசா மாநிலத்தில் 9 இடங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த மாநிலத்தின் தொழில் வளர்ச்சி வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மீன்களுக்கான நோய்களை அறிய புதிய செயலி: மத்திய அரசு அறிமுகம்
1980ம் ஆண்டில் இருந்தே இந்தப் பகுதிகளில் ரகசியமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் 2021-22 காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தான் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவல் ஒடிசா மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ஒடிசாவில் கே.ஜி.எஃப் என்று பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
-ம.பவித்ரா