ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்தால் மோதாமல் தடுக்கும் தொழில்நுட்பம் கோரமண்டல் ரயிலில் இருந்ததா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வந்தால் அவை மோதாமல் தடுக்கும் கவாச் (KAVACH) தொழில்நுட்பம் இந்திய ரயில்வே துறையில் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒடிசாவில் நடைபெற்ற கோர ரயில் விபத்துக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் சரக்கு ரயிலும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் வந்து மோதிக் கொண்டதே காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்படியானால் கடந்த ஆண்டு சோதித்துப் பார்க்கப்பட்ட ரயில்கள் மோதலைத் தடுக்கும் கவாச் தொழில்நுட்ப அமைப்பு கோரமண்டல் ரயிலில் அமைக்கப்பட்டிருக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய ரயில்வே பாதுகாப்புக்கென மூன்று நிறுவனங்களின் உதவியோடு உள்நாட்டிலேயே இந்த கவாச் பாதுகாப்பு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு கவாச் தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிசா விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
ரயில்கள் மோதலைத் தடுப்பதுடன் கடுமையான பனிப்பொழிவு போன்ற மோசமான வானிலைக் காலங்களில் ரயிலின் செயல்பாடுகளையும் பாதுகாக்கக் கூடியது இந்த கவாச் தொழில்நுட்பம். இதில் பிரேக்குகளை போடும் போது ரயிலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு விபத்துக்கள் ஏற்படுவது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.